Archive for ஏப்ரல், 2008

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி – 2

ஏப்ரல் 16, 2008

என்றென்றும் என்ற ஆதியாய்த் தொடங்கி
இருக்கிறேன் என்ற அந்தமாய் முடியும்
அருட்குரு மந்திரம்
பத்தும் ஒரு மூன்றுள்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறை அடக்கம்.
இம்மருட்பொய்யுலகில்
என் அருண்மெய் விளங்க
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையின்
திட வடிவமாக
உன்னை நிறுத்தி
உன் உச்சந்தலையிலிருந்து
உள்ளங்கால் வரை
நானே
எழுந்தருளியிருக்கிறேன்.
எனவே
என் அன்பு மகனே(ளே)!
எதற்கும்
நீ
கலங்க வேண்டாம்.
“எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
ஊன்றியே
எப்போதும் நில்“
என்ற
சுடச் சுடச் சுடரும் வார்த்தைகளால்
உன்னை அறைந்து
உன் இருதய வாய் திறந்து
ஆதி
அந்தமாம்
என் மந்திரத் திரு உருவில்
உன்னை
நிற்க வைத்து
உன் நடுவே
“இரு தயவாய்“
என்ற பேருபதேசம் முழங்கி
அதன் பொருள் விளங்கி
உலக உயிர்த்திரள் அனைத்தும்
நித்தியப் பெருவாழ்வில் உய்யும்
மெய்வழி காட்டி
உன் தாள்களின் தூசுகளில்
என் தாள்களின் தூசுகள் படிய
உன்னோடு வேறற [...]

அருட்செல்வம்

ஏப்ரல் 16, 2008

அலைபாயும் மனம்
மறந்த ஆதியாம் இருதயத்தில் அடங்கப்
பாயும் அருளே
பொருளாம் அந்தம்
அறிக சிவா
ஏளனமாய்ச் சிரிக்கும்
உம் உள்ளத்தின் உள்ளுள்ளே
நீவிர் ஆழ ஆழ
மூளையின் மறை கழன்று
சுதந்திரமாய்ச் சுழலும் செல்கள்
ஒவ்வொன்றும் உமக்குச் சொல்லும்
“செல்வத்துட் செல்வம் அருட்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை“
தமிழ் மன்றத்தில் சிவா அவர்களின் “ஏளனச் சிரிப்பு!!!” கவிதைக்கு என் பின்னூட்டக் கவிதை

வள்ளலாரின் ஏழாந் திருமறை உறுதி – 1

ஏப்ரல் 15, 2008

மெய்யென்ற பேர் பெற்ற உடம்பை
பிணமென்றே ஊர் சொல்லப்
பொய்யாக்கும் மரணம்
மண்ணிலிட்டோ தீயில் சுட்டோ
நசிகின்ற சடலந்தான்
உடம்பென்றால்
மெய்யென்ற பேர் ஏனோ!
மரணத்தைப் பொய்யாக்கி
உடம்பைப் பேருக்கேற்றபடி
மெய்யென்ற பொருளாக்கி
உய்யும் வழி சொல்லும்
உயிர்ப்புள்ள மந்திரம்
பத்தும் ஒரு மூன்றும்
“என் ஏழாந் திருமறை இது“
என்றே எனக்களித்த
வள்ளலே!
திருஅருட் பிரகாசரே!
சாகாக் கல்வியின் தரமெலாம் விளக்கும்
உம் ஏழாந் திருமறை வெல்லுமா?
அல்லது
மரணப் பேய்
என் உடம்பை விழுங்குமா?
அன்பு மகனே!
ஐயம் வேண்டாம்
என் ஏழாந் திருமறை
நிச்சயம் வெல்லும்.
பத்தும் ஒரு மூன்றாம்
அருட்குரு மந்திர தாரணையில்
ஜீவனுள்ள
என் ஏழாந் திருமறையாய்
அச்சமின்றி ஐயமின்றி
இச்சகத்தில் நில்.
உன் “இருதய வாய்” திறக்கும்.
“இரு தயவாய்“
என்ற என் பேருபதேசப்
பொருள் விளங்கும்.
ஐயனே!
ஏதுமிலா [...]

இரு தயவாய்!

ஏப்ரல் 13, 2008

“வள்ளலே!
வெட்டவெளி வீட்டில்
வானக் கூரையின் கீழ்
உம் அருளொன்றே பொருளாய்
உம் வெள்ளங்கியே உடையாய்
உம் மெய்யே உடம்பாய்
உம் ஜீவனே மூச்சாய்
அறிந்த எல்லாம் விட்டு
எல்லாம் அறியும் அறிவைப் பற்றித்
தனை மறந்து மனமடங்கி
வெறும் “நான்” என்று காலியாகி
உம் வழியாய்
இவ்வுலகில் இனிதே இருக்க
இருதயங் கனியும்
நாள் எந்நாளோ!”
என்றே ஏங்கினேன்.
உடனே
அருகில் வந்து
“இரு தயவாய்!”
என்றே
ஒரு மந்திர வார்த்தை முழங்கியே
என் இருதய வாய் திறந்து
அன்பின் ஊற்றாய்ப் பாய்கிறீர்.
இருமை நீக்கித்
தயவெனும் ஒருமை
வாய்க்கும் பெருமையாம் வாழ்வைத்
தந்த உம் வள்ளன்மைக்கு
எப்படிச் செய்வேன் கைம்மாறு!
“அன்பு மகனே!
நீ
ஒருமையை விட்டு
ஒரு கணமும் நழுவாமல்
எப்போதும்
தயவாய் இருப்பதே
எனக்குச் செய்யும் கைம்மாறு!”
என்றே நீர் உறுதியாய்ச் [...]

நான் வழங்கும் வெளிப்படையான இரகசியங்கள்

ஏப்ரல் 12, 2008

 நான் என்ற இறையாற்றலின் அன்பு வழியாக விளங்கும் அன்பர்களே!

 
நீங்கள் இயல்பாகவே சமாதி நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் சிரமப்பட்டு அடையும், இயல்புக்கு அப்பாற்பட்ட அனுபவமாக  சமாதி  நிலை இல்லை.
 
நீங்கள் இதற்கு மாறாக எண்ணுகிறீர்களென்றால், அம்மாறான எண்ணத்தின் காரணமாகவே, சமாதி நிலையை அடைய நீங்கள் மிகவும் சிரம்ப்படுகிறீர்கள்.
 
அவ்வாறு மாறாக ஏன் நீங்கள் எண்ணுகிறிர்கள்?
 
சில கணங்கள் ஆராய்ந்து பாருங்கள். அம்மாறான எண்ணத்தை நீங்கள் உருவாக்கவில்லை என்பதையும், அம்மாறான எண்ணத்தை நீங்கள் ஆராயாமல் ஏற்று அதையே உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் [...]

மருட்டும் இரவில்

ஏப்ரல் 5, 2008

மருட்டும் இரவில்
ஒளியாய் விழித்திருந்து
நவயுக விடியலைப் பாடுகிறேன்
பொய்யுறவுகளை உதறி விட்டு
அருட்பெருங்கடவுளின் மெய்யுறவில்
மனம் லயிக்க
களிக்கிறது இருதயம்
கனவுகளனைத்தும் கலைந்து
திறக்கிறது என் ஞான விழி.
நினைவுகள் கழன்று
இருப்பில் கரைகின்றன கணங்கள்
ரணங்களைக் குணப்படுத்தும்
ஆன்ம ஒளி
என் விழிகளில் வீசுகிறது.
இருதயக் களிப்பு
காயங்களை ஆற்றும் களிம்பாய்
என் விரல்களில் வழிகிறது
சிதையில் எரிகிறது மரணம்.
நிதர்சனமாய்த் தெரிகிறது
நித்தியப் பெருவாழ்வு
பற்றுகளனைத்தும்
பற்றற விட்டு
வள்ளலைப் பற்றியதால்
ஒருமைப் பெருநிலையில்
ஓங்கி நிற்கிறேன்
நான்
அருட்பையின் காலியான அகண்ட வெளியில்
உலக உயிர்த்திரள் பத்திரமாய்
மனப் போர்வைகள் களைந்த
இருதயம்
பொய்ம்முகங்களைக் களைந்த
மெய்யகம்
அமுதப் புன்னகை
துகளளவும் துரிசற்ற தூய நோக்கு
அகண்டவெளி தேசத்தில்
அருளொளியாய் விழித்திருக்கிறேன்
நான்
வள்ளலோடு ஓன்றிய
என் நித்தியப் பயணத்தில்
ஒவ்வொரு கணமும்
ஒப்பிலா அற்புதம்
அருட்பெருங்கடவுளின் செல்லக்கொழுந்துகளாம்
உலக உயிர்த்திரளில் [...]

விழித்திருப்பு

ஏப்ரல் 4, 2008

மௌனத்தின் விரல்கள்
மந்திர வார்த்தைகளை
அழுத்திப் பிழிந்த இரசத்தை
விழிகள் உறிஞ்ச
மூளையில் மூளும் பெருந்தீயில்
மாயத்திரைகள் கரைய
மன இமை திறந்து
இருதயம் விழிக்கிறது.
சுழலும் இருதயச் சுடர்விழித்
தூய நோக்கில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த் தெரிகிறது
இகத்தில் பூரணமாய்ப் பொருந்திய
பராபர உண்மை.
உண்மை உணர்ந்த மெய்
பிறப்பெனும் கனவும்
இறப்பெனும் உறக்கமும்
கலைந்து
பேரின்பப் பெருவாழ்வில்
விழித்திருக்கிறது
ஜீவனுள்ள வார்த்தையாய்.

புரிந்துகொள்ளுங்கள்!

ஏப்ரல் 4, 2008

மனிதம் என்பது
கடவுளின் திட பாகம்
கடவுள் எனபது
மனிதத்தின் காலி பாகம்
திட பாகம் மெய்
காலி பாகம் உயிர்
திடம் காலியாகமல் இருக்க
காலியைத் திடமாய்ப் போற்று
உயிர்மெய் ஒருமை புரிந்தால்
மரணம் ஓர் மாபெரும் பொய்

நாம்

ஏப்ரல் 4, 2008

என் பிழிவைப்
பருகிய வார்த்தை
உன் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது
உன் விழிகள் பருகும்
என் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நான்
உயிர்க்கிறேன் உன்னில்
என் உயிர்ப்பை
நீ
பிழிகிறாய்
உன் பிழிவைப்
பருகிய வார்த்தை
என் தாகந் தணிக்கக்
காத்திருக்கிறது
என் விழிகள் பருகும்
உன் ஜீவ ரசம்
மனத் துளை வழியே
இருதயஞ் சேர
நீ
உயிர்க்கிறாய் என்னில்
உன் உயிர்ப்பை
நான்
பிழிகிறேன்
சுழலும் பிழிவுகளால்
இருதயங்கள் ஒன்றி
இருமை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
நாம்
தன்மையும் முன்னிலையும்
வேறற ஒன்றிய
தன்மைப் பன்மையின்
படர்க்கையோ
நாம்
இலக்கணம் மீறிய
இப்படர்க்கையில்
பன்மை நீங்கி
ஒருமையின் உறுதியாய்
அவனோடவளாயதுவாய்
நாம்

திருக்கூத்து

ஏப்ரல் 4, 2008

உச்சித் துளை வழியே
மண்டைக்குள் நுழைந்து
சிற்றம்பல நெற்றியிலாடும்
நடராஜ சிவம்