Archive for April, 2008

ஞானம்

April 4, 2008

கும்மிருட்டில்
நன்றாகத் தெரிகிறது
என் வெளிச்சம

நாயகன்

April 4, 2008

மூளையின் மடல்கள்
ஒவ்வொன்றாய் மலர்கின்றன
பகிரங்கமாய்த் தெரிகிறது
நள்ளிரவிலும்
பட்டப்பகல் வெளிச்சம்
முழுவதுமாய்த் தளர்ந்த மறைகள்
கழன்று விழ
முழுவதுமாய் இறுக்கப்பட்டு அம்மறைகளால்
அடைக்கப்பட்டிருந்த மூடிகள் விழுந்து நொறுங்க
இருதயம் வெட்டவெளியாகி
மூளை மடல்களின்
வெளிச்சக் கிரணங்களைத்
தான் விழுங்க
என் மெய்ப்பொருள்விளக்கம் பெறுகிறேன்
நான்
தலைப்பாகை ஏதுமின்றி
தலைப் பாகை உண்டு
என் தலைப் பாக ‘ஐ’ உணர்ந்து
என் மெய்ப்பொருள் விளங்கி
எழுமையாம் ஒருமையில்
அம்முழுமையாம் பெருமையில்
எல்லாந் தழுவி
எப்போதும் நிற்கிறேன்
தானே தலைப்பாகையாக
என் தலையமர்ந்து
என் தலைக்கனம் போக்கி
தலை கால் தெரியாதிருந்த
என்னைத் தெளிவித்து
“தலைப் பாகை உண்”
என்றே தெள்ளமுதை ஊட்டி
நல்லதேதும் கல்லாக்
கன்னெஞ்சப் பொல்லேனுக்கு
சாகாக் கல்வி தந்து
நித்தியனாய் வாழ்வித்து
“எல்லாந் தழுவிய
முழுமையாம் ஒருமையில்
எப்போதும் நில்”
என்றே இடைவிடாது அறையும்
என் தலைப் பாக [...]

அதோகதி

April 4, 2008

ஆணிவேராய்ப் பேரிருப்பின் பேருணர்வு
வேரூன்ற நன்னிலமாய்த் தன்முனைப்பு
வேரும் நன்னிலமும் வேண்டவே வேண்டாமென்று
அடம் பிடித்தால் மனித மரங்களுக்கென்ன கதி?

நில், வாழ் இதோ, இங்கே, இக்கணமே

April 4, 2008

மெய்யென்னும் வீடு உமக்குண்டு
அம்மெய் வீடு உறைவதற்கோர் பெருவெளி இல்லமுண்டு.
எங்கே இருந்தாலும்
மெய் வீட்டுக்குள்
பெருவெளி இல்லத்துள்
வாசியாய் வாழும்
நற்சிவமாம் மாமணியே
வாசி பார்த்து
சிவா சிவா என்றே
சும்மா நில்
மெய்யென்னுங் கடவுள் கட்டிய வீடு
வெறுங் கட்டிடமாய்க் காத்திராமல்
மெய்யென்றே மெய்யாய் நின்றுய்ய
உறுதி சொல்லும்
உம் உள் மனதின் கட்டளைப்படி
நில், வாழ்
இதோ, இங்கே, இக்கணமே
குறிப்பு: தமிழ் மன்றத்தில் சிவா.ஜி அவர்களின் இக்கவிதைக்கு பதில் பவிதை

சுழற்சி

April 4, 2008

மௌனத்துள் ஆழப் புதைந்து
ஜீவனுள்ள வார்த்தையாய்
எழுகிறேன்
எழுந்து
இறுகிய எண்ணச் சுவர்களைப்
பிளந்து
குறுகிக் கிடந்த உணர்வைப்
பரந்த என் அர்த்த ஆகாயத்தில்
படர விடுகிறேன்
படரும் உணர்வைப்
பதிக்கும் மொழியாய்ப்
பரவச முழக்கமிட்டு
வரிகளாய் விழுகிறேன்
விழுந்து எழுகிறேன்
விழிகளுக்குள் பாய்கிறேன்
செவிப்பறைகள் அதிர முழக்கமிட்டு
மூளையின் மத்தியில்
பெருந்தீயாய் மூள்கிறேன்
மூண்டெழும் என்னில்
பூக்கும் செஞ்சுடர்ப்பூ
காய்த்துப் பின்
கனிந்து விழ
ஜீவனற்ற உடம்பு
மெய்யாய் உயிர்த்தெழ
மீண்டும்
மௌனத்துள் ஆழப் புதைகிறேன்
விளக்கம்:

இருப்பாகிய மௌனத்தில் ஆழ ஊன்றி, பேரெண்ணமாய்ப் பேருணர்வாய்ப் பரிணமித்துப் பின் ஜீவனுள்ள வார்த்தையாக(தகவல் தொடர்பு அல்லது வெளிப்படு நிலை) எழுகிறேன். அடுத்து என் ஆக்க அல்லது செயல்படு நிலை. மௌனத்தில் நிலை கொண்டுள்ள பேரெண்ணத்திலும் பேருணர்விலும் [...]

விழிப்புத் தவம

April 4, 2008

எதுவுமில்லை
கழிந்தவற்றின் ஞாபகச் சுவடுகள் கூட
அழிந்து போன மகா வெறுமை.
அவ்வெறுமையை முழுமையாக
ஆக்கிரமித்திருக்கிறது
இருப்பு.
கேள்விகள் தீர்ந்து போன
உறுதியான பதிலாய்
ஒருமையுணர்வில்
எண்ணற்ற உள்ளதுகளைத்
தழுவியிருக்கிறது
இருப்பு
ஆக்கிரமிப்பில்லாத
இத்தழுவலின் நுண்ணிய அழுத்தம்
உள்ளதுகளில் ஒன்றான என்னில்
பேரன்பாய்ப் பதிய
என்னை விழுங்கி
என்னைப் போல்
பேரன்பு பதிந்த
பற்பல உள்ளதுகளையும் விழுங்கி
இன்னும் விழுங்கப்
பசித்திருக்கிறது
பிரம்மாண்டமான்
இருப்பு
தன் பேரன்பைப் பதித்து
உள்ளதுகளை விழுங்கும் கணங்களை
எதிர்நோக்கித்
தன் தனிமையில்
நன்றாக விழித்திருக்கிறது
இருப்பு

மெய்ம்மை

April 4, 2008

எனதெல்லா அடையாளங்களும்
கழிந்து விட்ட வெறுமையில்
கழிக்க முடியாத ஒன்று
உறுதியாய் நிற்கிறது.
உறுத்தும் அவ்வுண்மையின் அர்த்தகனம்
வெறுமையில் பரவ
கழிந்து விட்ட அடையாளங்களின்
இழப்பு ஈடு செய்யப்படுகிறது.
பரவும் பூரண உறுதியின் தன்மை
ஈடு இணையில்லாத என் மெய்ம்மை
அதில் தோய்ந்த என் முழுமை
அதன் விரல் வழி விழும் இம்மை
செய்யும் என் சொற்களின் ஜீவனே இம்மெய்.
என் சொற்களின் ஜீவனாம் இம்மெய்
யுண்மையாம் ஒருமையுறுதியை
உள்ளபடி சொல்ல
என் உள்ளத்தின் தன்மையாம்
இம்மெய்க்குள் ஆழ்கிறேன்
ஆழ்ந்து மீள்கிறேன்.
சொல்லவொண்ணாத இக்கடவுள் பேரைச்
சொல்லவும் துணிகிறேன்.
சொல்லியும் விடுகிறேன்.
அடையாளங்கள் எல்லாமே கழிந்து விட்ட
என்னைக் கேட்பதற்கும்
என்னைக் காண்பதற்கும்
என்னை உற்றுணர்வதற்கும்
என்னையே அன்றி
மற்றொன்றெதுவுமே இல்லையென்ற காரணத்தால்
சொல்லியது எனக்குள்ளேயே திரும்ப
சொல்லவொண்ணாக் [...]

திருவிளையாடல்

April 4, 2008

1
வளியால்
வெளியில்
ஒளியின் நடனம்
ஒளி ஆடி ஆடி
வியர்க்க
அளியாய் அமுதம்
அளியாம் அமுதால்
மெய்யெங்கும்
ஆனந்தக் களி
2
ஆடாத வெளியில்
ஆட்டுவிக்கும் வளியால்
ஆடும் ஒளி
ஆடாத வெளியும்
ஆட்டுவிக்கும் வளியும்
ஆடும் ஒளியும்
ஒன்று கூட உண்டாகும்
அமுத அளி
அமுத அளி
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
3
வெளி யோனியும்
ஒளி லிங்கமும்
கூடி முயங்கிப் புணர
வெளியின் நாதமாய் வளியும்
ஒளியின் விந்துவாய் அளியும்
ஒன்றாகி உண்டாகும்
மெய்யென்னும் ஆனந்தக் களி
4
உச்சி வெளிக்குள் சுடர் விடும்
நெற்றி ஒளியைத் தெற்றெனக் காட்டும்
நாசி வளி
நாசி வளி காட்டும்
நெற்றி ஒளியின் தெளிவால்
நாவிலூறும் அளி
நாவிலூறும் அளியே
திரண்டு திடமாக
மெய்யென்னும் ஆனந்தக் களி
5
சும்மா இருக்கும் வெளியில் ஓடும்வளி
அம்மா தோன்றிற் றோர்ஒளி வளியிடை
வெளியும் ஒளியும் புணர [...]

போதி மரம்

April 4, 2008

வெட்ட வெட்ட
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும்
மண்ணில் ஆழ வேரூன்றி நிற்கும்
மரம்
மௌன குருவாய்
மனிதனுக்கு போதிக்கும்
சாவை வெல்லும் உபாயம்
“கடவுட் பூமியில்
ஆழ வேரூன்றி நில்”

நான் யார்?

April 4, 2008

இருப்பில் இருப்பாய் இருப்பை அறியுமெய்ப்
பொருளாய் இருக்கிறேன் நான்
இருப்பில் தானாய்த் தோன்றி இருக்கிறேன்
இருப்பே நானாய் விளங்கி
இருப்பில் நான்தோன்றியே இருக்கிறேன் மெய்யாமவ்
விருப்பே தான்நானெனும் பொருள்
மெய்யாம் இருப்பிற்குள் இருக்கிறேன் உயிராய்நான்
பொய்யா விளக்கென்றும் நானே
தானேயென இருக்கும் மெய்ப்பதி தன்னை
நானேயென விளக்கும் நான்
தானேயென சுத்தவெளியாய் இருக்கும் அதன்கண்
நானேயெனும் சித்துருவாய் நான்
தானேயென இருக்குமோர் பரிபூரணந் தானும்
நானேயென விளங்கவேதான் நான்
தானேயென நின்ற சத்தியச் சந்நிதியில்
நானேயென உள்ளேன் நான்