ஓர் இருதயப் பகிர்வு – நண்பர் ஜாஃபர் அலிக்கு(ஹரனுக்கு)

உச்சி திறந்ததே பார்உன் நெற்றியில்
அத்த னவன்திரு நடனம்
புத்தி தெளிந்ததே நாவில் ஊற்றுதே
தித்திக் குந்தெள் ளமுதம்

உம்நாவு நுனியை அண்ணத்தில்(மேல் வாயில்) வைத்து
ஆற்றில் ஒரு கால் ஊன்றி
அண்ணாக்கில் கவனம் நிறுத்தி
மூச்சில் மனத்தை வசித்து
தெள்ளமுதப் பாகை ருசித்து
சேற்றில் இரு கால் பதித்த
அல்லாவின் தூதராய் இருப்பீர்
ஜாஃபர் அலியாம் நீவிர்
 
ஆறாதாரத்தில் எழுகின்ற குண்டலிச் சூட்டைத் தணிக்க
நிராதாரத்தில் எழுந்திருக்கும் நபிகள்ருளைப் பொழிவார்
நிராதார வடிவாய் ஆறாதாரத்தில் நாயகம் நிற்பார்
தராதலம் முழுதும் உம்மூடே அருளாய் வழிவார்
பராபர மேனிலை சேர்ந்திட உம்முள்ளே சுழிவீர்
பராபரை அருளாய் இகமெங்கும் பொங்கியே வழிவீர்

Leave a Comment