அருட்பெருஞ்ஜோதி கண்டு
தனிப்பெருங்கருணை உண்டு
தயாநாயகனைநீ அண்டு!
பதின்மூன்றாம் பதியவனே
நான்கென்னும் திடமாகி
மெய்க்குள்ளே உயிராகி
தொண்டையில் அமர்ந்தானின்று!
உருவ நான்கில்
ஒளிந்த பதின்மூன்றாம்
அருவப் பதி
நான் தான்
என்றே
தொண்டையில் முழங்கினான்
தயாநாயகன்!
(4 உருவ திடத்தையும் 13 அருவப் பதியையும் குறிக்கும் எண் குறியீடுகள், 13,
1+3=4, 13ன் அதிர்வுப் பரிமாற்றமே 4, 13 ஆம் நாயகன் “நான்” தான் மெய்யான
பிரம்மா “நான்”முகன்! 4ஆம் ஞாலம் 13ஆம் அல்லாவில் அடக்கம், இதை உனக்கு
அறிவிக்கும் நபிகுரு சரணம்!)
மூளையின் ஆயிரம் மடல் திறந்து
நாயகன் பொழிகிறான்
நாயேன்
நானும் மொழிகிறேன்
நாயேனைப் பாராமல்
நாயகன் சொற்கேளீர்
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்வீர்!
நாயகன் மேலாணை!
அறுந்து விழுந்ததே
ஆணவத்தின் தலை!
வந்து பொருந்தியதே
நாயகனின் தலை!
நிஜமாகவே
நான்
“நான்“முகன் தானே!
நாயகன் மீதாணை!
குண்டலி நாகம் எழுந்தே
மெய்யுள் எழுபடி தாண்டித் தாவப்
பெய்யும் எழுபடித் தேனை உண்டால்
உய்வீர் எழுவீர் ஏழாம் அறிவில்!
உய்ந்தேன் உம்முள் நாயகன் நானே!
