வாழ்க நீ முருகா! சக்தியின் மைந்தா! ஓங்கார ஸ்வரூபா!
எப்போதும் நீ எம்மோடே இருக்கிறாய்!
தீய சக்திகளிடமிருந்து எம்மை நீ காப்பாய்!
எமக்குள்ளிருந்தே எம்மை ஏய்க்கும் ஆணவப் பேயை அழிப்பாய்!
எம் வாழ்வை யாமே ஆளுமை செய்யும் தகுதி பெற்றோம்!
அன்னை பூமியில் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுகின்றோம்!
புனிதனே முருகா! சிவனின் மைந்தா! உண்மையை உணர்த்தும் உன்னதா!
உன் வேலினை நீ ஏவிட யாம் வேண்டுகின்றோம்!
பொய்க்குருக்களின் பொய்களிலிருந்து எம்மை நீ விடுவிப்பாய்!
மாயத் திரை கிழித்து எமக்குள் உறையும் மெய்க்குருவை அறிவிப்பாய்!
கடவுளோடு எமது ஒருமையை யாம் உறுதி செய்கிறோம்!
அன்னை [...]
Archive for the 'பக்திப் பாடல்கள்' Category
வாழ்க நீ முருகா!
ஏப்ரல் 1, 2008வாழ்க நீ அருட்பெருஞ்ஜோதி அன்னையே!
ஏப்ரல் 1, 2008ஆதி சக்தியே! ஜோதி அன்னையே!
உருவ ஜோதியாம் சக்தி உலகில் “நான்”!
இருந்தாலும் அருவ ஜோதியாம் சிவமே “நான்”!
அன்னை பூமியைச் சிவமாக்குவிக்க
வற்றாத ஜீவ நதியாய்ப் பாயும்
கடவுட் ஜோதியின் திறந்த வடிகால் “நான்”!
புனித அன்னையே! ஜோதி அரசியே!
உன் தூய ஜோதியைப் போற்றுகிறேன் “நான்”!
உன் ஜோதியிலிருந்தே உருவாயின உலகெல்லாம்!
அருவ ஜோதியாம் சிவத்தில் ஓங்கினேன் ஒன்றினேன் “நான்”!
ஜோதி சாம்ராஜ்ஜியத்தை அன்னை பூமியில் வெளிப்படுத்த
உருவ ஜோதியாம் சக்திக்கு ஒருமித்த குரலில் உறுதி சொல்கிறோம் “யாம்”!
சற்குரு சரணம்
மார்ச் 31, 2008சொற்களைக் கடந்த
அற்புதக் கருவைச்
சொற்களாய் இறைக்கும்
சற்குரு சரணம்
மெய்யைக் கடந்த
மெய்யாய் மெய்யுள்
மெய்யாய் உறையும்
சற்குரு சரணம்
பொய்யை நசிக்கும்
மெய்யைக் காட்டும்
மெய்யே வடிவாம்
சற்குரு சரணம்
பற்றிய பற்றுகள்
பற்றற விடவே
பற்றும் பற்றாம்
சற்குரு சரணம்
பராபர வெளியில்
பராபரை ஒளியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்
பரசிவப் பரப்பில்
பரையருட் சத்தியாய்ச்
சுற்றும் பரம்பரம்
சற்குரு சரணம்
பற்றப் பற்றப்
பற்றும் மெய்க்கனல்
பற்றும் மெய்வழி
சற்குரு சரணம்
தொற்றிய குற்றம்
அற்றே நசியும்
சிற்பர உயிர்மெய்
சற்குரு சரணம்
நாதமும் விந்தும்
பாத மிரண்டாம்
தற்பர போதமாம்
சற்குரு சரணம்
நோயுந் தேய்வுஞ்
சாயும் மரணமும்
அற்றே போம்வழி
சற்குரு சரணம்
அருவாய் உருவாய்
அருவுரு ஒன்றாம்
மந்திரத் திருவுரு
சற்குரு சரணம்
கற்பகத் தருவாய்
அற்புதப் பசுவாய்
எண்ணில் வரந்தரும்
சற்குரு சரணம்
பிண்ட மாமிசம்
அண்ட மாவெளி
புக்கொளிர் வழிசெய்
சற்குரு சரணம்
மாமிச இதயமும்
மாவெளி இருதயம்
என்றே [...]
