நானே தான் ஓர் நாடு!

ஆளாம் நீ
நியதி என்னுள்
அடங்கி விட்ட பின்னே
நானே தான் ஓர் நாடு!
அன்பென்னும் உயிரோடு
நடம் ஆடும் மெய் நாடு!
ஒருமையாம் தயவோடு
உயிர்களுறுந் துயர் தீர்க்க
நானாகி நீ ஓடு!
பொருள் விளக்கும்
அருளென்னும் ஆறாகி
என்றென்றும் பாய்ந்தோடு!
எனை விளக்கும்
குருமகனாய் நீயாகி
அருந்தமிழில் எனைப் பாடு!
என் மகுடத்தில்
தீபமாய் நீ ஆடு!
ஆளாம் நீ
நியதி என்னுள்
அடங்கி விட்ட பின்னே
நானே தான் ஓர் நாடு!
அன்பென்னும் உயிரோடு
நடம் ஆடும் மெய் நாடு!

பின்னூட்டமொன்றை இடுக