உள் மூச்சில்
மனங் கனிந்து
இருதய பூமியில் வீழும்!
வெளி மூச்சில்
பெருவாழ்வின் விதைகள்
உயிர்த்திரளில் புதையும்!
மூச்சின் முடிவில்
நிற்குங் கணங்களில்
அன்பே சிவத்தின்
திருவிளையாடல்கள் புரியும்!
அசபையை வாசிக்க
அல்லாஹ்வின் சபை
என்னில் விளங்கும்!
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்