வள்ளலே! தற்சமயம் நீவிர் எங்குள்ளீர்?
101
வடுஅல் ஊராய்ப் புவியை மாற்ற
மகவுன் இருதயத் துள்ளோம்
வள்ளலே! சுத்த வெளியாய்ப் புவியை மாற்ற முடியுமா? நம்புவதற்குக் கடினமாயிருக்கிறதே!
102
அன்பினால் கூடாத காரியம் எதுவுமில்லை
அன்புயாம் தேவாதி காரணம்
தேவாதி = தேவ ஆதி, இறை முதல்
103
வடுஅல் ஊரே யாவின் மெய்ம்மை
மறதி தானே மாயை
104
மறதி நீங்கி மெய்ம்மையின் ஞாபகந்
திறக்க மாயும் மாயை
105
மெய்ம்மையின் ஞாபகந் தோன்றும் இருதயத்
துய்ந்தேஎம் போதகங் கேள்
106
சுபம்மிகு இக்கணம் புனிதமாம் இவ்விடம்
இருதயத் துய்ந்திட அற்புதம்
107
அவரிவர் தேவரென அங்குமிங்கும் அலையா
தமர்ந்திடு நேசநுனி இருதயம்
108
உவரொரு தேவன் அன்பே யாமென
உணர்த்திரு பூமி இருதயம்
உவரொரு தேவன் = அவர் இவர் அல்லாத உகரஞ் சுட்டும் உன்னுள் உயிர்த்த இறைமை
பின்னூட்டமொன்றை இடுக