மெய்ஞ்ஞான விஞ்ஞான ஒருமையால் நீங்கும்
அஞ்ஞானம்! பேதிக்கும் இருமையால் தீங்கே
எஞ்ஞான்றும்! போதிக்கும் குருமெய்யால் நீங்கும்
சஞ்சலங்கள்! விஞ்ஞைகள் செயக்கல்நீ சூத்திரம்!
பொய்யான கடத்தை முந்நாளில் ஒளிரும்
மெய்யாக்கி நடந்தார் குருநாதர் இயேசு!
மெய்வழியும் ஜீவனாய் இருக்கின்றேன் நானே!
உய்யுங்குரு மந்திரந் தந்தாரே கிறிஸ்து!
இடவா சுடவா என்றே வாதித்த
இருமதத் தாரும் நாண நானக்
குருதன் சவத்தைப் பூக்களாய் மாற்றினார்
ஒருமொழி “சத்நாம்” தந்தார் உத்தமர்!
(சீக்கியர்களின் “குரு கிரந்தம்” என்ற புனித நூல் “சத்நாம்” என்ற திரு மந்திரத்தோடு ஆரம்பிக்கிறது. “சத் எனும் இருப்பே கடவுளின் பெயர்” என்பதே இதன் பொருள். “சத்தே நின் நாமம், சித்தே நின் ரூபம், ஆனந்தம் நின் சத்திய தரிசனம்” என்ற குருமொழியை அகத்தவத்தில் அருளிய அப்பெருமானை வணங்கி நம்மை சாகாக் கலை நெறியில் வழிநடத்த இறைஞ்சுகிறேன், குரு நானக் = நானக் குரு = நான் அக்குரு, பெருமானின் பேரிலேயே பேருபதேசம், அதுவே நாயேன் பேர் முன்னர் நான் போட்ட காரணம்!)
மறுமொழியொன்றை இடுங்கள்