1. என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
சஹஸ்ரார மூலாதார எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், சஹஸ்ரார பூரணத்துவம் மூலாதாரத்தில் சிதைந்து, பிறப்பு-இறப்புச் சுழலில் நாம் சிக்கி விட்டோம். அப்பூரணத்துவம் மூலாதாரத்தில் இறங்கப் பேரின்பப் பெருவாழ்வு நமக்குக் கிடைக்கும்.
2. என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
ஆக்கினை சுவாதிட்டான எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், ஆக்கினை சுயம்பிரகாசமே(நாத விந்து) சுவாதிட்டானத்தில் சிதைந்து ஆண்-பெண் காமத் தினவில் நாம் சிக்கி விட்டோம். அச்சுயம்பிரகாசம் சுவாதிட்டானத்தில் இறங்க சிவ சக்தி காதற் புணர்வை இகத்தில் எப்போதும் உணர்வோம்(நாத பிந்து கலாதி நமோ நம – இகக் காம இருட்புணர்வு நீங்கி, பரக் காதல் ஒளி(லி)யுணர்வு)
3. என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
விசுத்தி மணிபூரக எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், விசுத்திப் பேரிருப்பே மணிபூரகத்தில் சிதைந்து ஆணவ ஆர்ப்பாட்ட வன்பில் நாம் சிக்கி விட்டோம்.
அப்பேரிருப்பு மணிபூரகத்தில் இறங்க ஆணவம் அழிந்து, இறைப் பேரிருப்பில் நித்தியமாய் வாழ்வோம்.
4. என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
அமிர்த கலச சூர்ய சக்ர எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் நினைவு கூறல், அமிர்த கலச ஆன்ம நேய இரூதய ஒருமையே சூர்ய சக்கரத்தில் சிதைந்து மருண் மயக்க மன இருமையில் நாம் சிக்கி விட்டோம்.
ஆன்ம நேய இருதய ஒருமை சூர்ய சக்ரத்தில் இறங்க, மன இருமை இருள் நீங்கி இருதய ஒருமை அருளில் நாம் ஆனந்தமாய் வாழ்வோம்.
5. என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
அனாகத சக்ர இருதய மையம், மேற்சொன்ன நான்கு எட்டு வடிவ சிவ சக்தியோட்டங்கள் ஊடே செல்லும் வழி
“இருதய வாய் திறக்க இரு தயவாய்”
நம் இயல்பாம் பேரன்பை மறந்ததால், மூடிக் கொண்ட இருதய வழியை, அப்பேரன்பை நினைவு கூர்ந்து மீண்டும் திறத்தல், எட்டு வடிவ சிவ சக்தியோட்டங்களால் உருவாகும் கீழ் மேல் சக்கர ஒருமையில் நிராதார மேனிலையை ஆறாதாரத்தில் தாங்கி இக பர பாலமாய்க் கடவுளின் மனித அவதாரமாய் நிற்றல்.
6. என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
4ஆம் மந்திரத்தோடு தொடர்புடையது
அமிர்த கலச சூர்ய சக்ர எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், அமிர்த கலச ஆன்ம நேய இருதய ஒருமையாம் பேரறிவே சூர்ய சக்கரத்தில் சிதைந்து மருண் மயக்க மன இருமையெனும் சிற்றறிவில் நாம் சிக்கி விட்டோம்.
ஆன்ம நேய இருதய ஒருமையாம் பேரறிவு சூர்ய ச்க்ரத்தில் இறங்க, மன இருமையெனும் சிற்றறிவு இருள் நீங்கி இருதய ஒருமையெனும் பேரறிவு அருளில் நாம் ஆனந்தமாய் வாழ்வோம்.
இக-பர பாலம் அமிர்த கலசம், அனாகதம், மற்றும் சூர்ய சக்ரம் இம்மூன்று சக்ரங்களினூடே செயல்படுகிறது
அமிர்த கலசம் – மேம்பாலம்
அனாகதம் – நடுப்பாலம்
சூர்ய சக்ரம் – கீழ்ப்பாலம்
மேல் நான்கு சக்கரங்கள் – மேம்பாலம்
அனாகதம் – நடுப்பாலம்
கீழ் நான்கு ச்க்கரங்கள் – கீழ்ப்பாலம்
ஆக இக-பர பாலமாய் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நாம் ஒவ்வொருவரும்
7. என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
3ஆம் மந்திரத்தோடு தொடர்புடையது
விசுத்தி மணிபூரக எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், விசுத்திப் பேரிருப்பாம் அருட்பேராற்றல் மணிபூரகத்தில் சிதைந்து ஆணவ ஆர்ப்பாட்ட வன்பில் நாம் சிக்கி விட்டோம்.
அப்பேரிருப்பு மணிபூரகத்தில் இறங்க ஆணவம் அழிந்து, இறைப் பேரிருப்பாம் அருட்பேராற்றலில் நித்தியமாய் வாழ்வோம்.
சத்து சித்து ஆனந்தம் (சச்சிதானந்தம்) மற்றும் சத்தி சித்தி பூரணம் இதுவே அருட்பேராற்றல், சத்துவ, ராஜச, தாமசத் திரிகுண மாயையிலிருந்து நிரந்தரமாய் முக்தி தரும் இறைப் பேரிருப்பு, துர்க்குணப் பிரமையிலிருந்து சகுணப் பிரம்மமாய் நம் ஒவ்வொருவரின் எழுச்சி.
தொப்பூழ்க் கொடி பரத்தில் நிலை கொண்டு, நாம் இகத்தில் பரமானந்த அருள் வெள்ளத்தைப் பாய்ச்சும் இறைமையின் தூய ஊடகமாகிறோம்.
8. என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
9. என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
2வது மந்திரத்தோடு தொடர்புடையது.
ஆக்கினை சுவாதிட்டான எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், ஆக்கினை சுயம்பிரகாசமே(நாதம்-தனிப்பெருங்கருணை, விந்து-அருட்பெருஞ்ஜோதி) சுவாதிட்டானத்தில் சிதைந்து ஆண்-பெண் காமத் தினவில் நாம் சிக்கி விட்டோம். அச்சுயம்பிரகாசம் சுவாதிட்டானத்தில் இறங்க சிவ சக்தி(தனிப்பெருங்கருணை-சிவம்-பெருவெளி, அருட்பெருஞ்ஜோதி-சக்தி-அருளொளி)காதற் புணர்வை இகத்தில் எப்போதும் உணர்வோம்(நாத பிந்து கலாதி நமோ நம – இகக் காம இருட்புணர்வு நீங்கி, பரக் காதல் ஒளி(லி)யுணர்வு)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
10. என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
1வது மந்திரத்தோடு தொடர்புடையது.
சஹஸ்ரார மூலாதார எட்டு வடிவ சிவ சக்தியோட்டம் மீண்டும் நினைவு கூறல், சஹஸ்ரார பூரணத்துவம்(கடவுட்தன்மை) மூலாதாரத்தில் சிதைந்து, பிறப்பு-இறப்புச் சுழலில் நாம் சிக்கி விட்டோம். அப்பூரணத்துவம் மூலாதாரத்தில் இறங்கப் பேரின்பப் பெருவாழ்வு(அதுவே நம் உயிரியல்) நமக்குக் கிடைக்கும்.
11. என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
12. எங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
13. நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு).
நிராதார மேனிலை ஆறாதாரப் பாலத்தினூடே இகத்தில் பூரணமாய்ப் பரவுதல்.
இருமையெல்லாம் நீங்கி பேரொளிக் கோளப் பேருணர்வில் நாம் ஒவ்வொருவரும் பூமியில் நிற்போம்.