மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை

நிராதார மேனிலை(மேல் நில் ‘‘)
ஆறாதாரம் மேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

சுகாசனத்திலோ நாற்காலியிலோ அமர்ந்து இடக்கையை மேல் நோக்கி மடியில் வைத்து(தியானம் முழுதும் இடக்கை அவ்வாறு இருக்கும், இது சமர்ப்பண உணர்வைக் குறிக்கிறது), வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, மேலேயுள்ள சற்குரு சரண வரிகளை ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்கு உம்மை முழுமையாக அர்ப்பணியுங்கள்

முதல் 8

வலக்கையை நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் தொண்டையின் கீழ் மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம்(ஆன்மநேய ஒருமை)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மார்படியில் நாபிக்கு நால் விரல் மேலே வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

இரண்டாம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் தொண்டையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி நாபியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

மூன்றாம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் நெற்றியின் மேல் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் சுடர்விடும் என் சுயம்பிரகாசம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி நாபியின் கீழே வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரங்களைத் தியானியுங்கள்

என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை(நாதம்)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி(விந்து)(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

நான்காம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி உச்சந்தலையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்திப் பின் புறம் முதுகடியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

ஐந்தாம் 8

வலக்கையை நகர்த்தி நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே ஓரடி உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

தயவாய்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
இரு(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி வலது முட்டியில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழிநடத்துகிறது(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

ஆறாம் 8

வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே ஈரடி உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

இரு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
தயவாய்(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி வலது பாதத்தில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

எங்கும் எதிலும் எப்போதும்(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

ஏழாம் 8

வலக்கையை நகர்த்தி தலைக்கு மேலே முழுவதுமாய் உயர்த்திக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தி மீண்டும் நடு மார்பில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வலக்கையை நகர்த்தித் தரையின் மேல் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

தியான முடிவு

இரு கரங்களையும் நடு மார்பின் முன் கூப்பி, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

நானே(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்(மூச்சை வெளி விட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

இரு கரங்களையும் விரித்து வாழ்த்தும் முத்திரையில் வைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைத் தியானியுங்கள்

என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு(மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே மனதில் உச்சரிப்பு)
ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது(மூச்சை வெளிவிட்டுக் கொண்டே மனதில் உச்சரிப்பு)

வாழ்த்தும் முத்திரையிலேயே கைகளை வைத்துக் கோண்டு

நிராதார மேனிலை(மேல் நில் ‘‘)
ஆறாதாரம் மேவிட
மந்திர உறுதியாம்
சற்குரு சரணம்

ஏழு தரம் உணர்வு பூர்வமாக உச்சரித்து வள்ளல் பிரானுக்குக் கோடானு கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். அமைதியாகச் சில நிமிடங்கள் அமர்ந்திருந்து தியானத்தை முடியுங்கள்.

3 Comments »

  1. 1
    wency A. Says:

    மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை-i thinamum eppadi pairchi sevathu? athan payan enna? manathirku amaithi kedaikkumaa? thayavu seythu pathil tharungal.

  2. 2
    Wency Says:

    மெய்வழி திறப்பு தியானம் செய்ய ஏற்ற வேளை எது? ஒரு நாளைக்கு எத்தனை முறை செய்ய வேண்டும்? பலன்கள் எவ்வாறு அமையும்..? உங்கள் பதிவுகள் சிறப்பாக இருப்பதற்கு நன்றி…!

  3. 3
    iamnaagaraa Says:

    9144 9566021578 என்ற குருவி(அலைபேசி) எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்


RSS Feed for this entry

பின்னூட்டமொன்றை இடுக