மெய்வழியில் ஏழு வழிகளால் எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்டங்கள்

மெய் வழியில் ஏழு வழிகள்

மெய்வழியில் ஏழு வழிகளால்(Open Channels-11’s) எழும் எட்டு வடிவ சிவ-சக்தி ஓட்ட்ங்கள்(Figure 8 Flows)

முதல் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே அமுதகலசத்தில் ஆன்மநேய ஒருமையாக விளங்கி(அருட்குரு மந்திரம் 4) கீழே சூரிய சக்கரத்தில் பேரறிவாக(அருட்குரு மந்திரம் 6) இயங்குகிறது

இரண்டாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே விசுத்தியில் பெருவாழ்வாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 3) கீழே மணிபூரகத்தில் அருட்பேராற்றலாய்(அருட்குரு மந்திரம் 7) இயங்குகிறது

மூன்றாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே ஆக்கினையில் சுயம்பிரகாசமய் விளங்கி(அருட்குரு மந்திரம் 2) கீழே சுவாதிட்டானத்தில் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதியாய்(அருட்குரு மந்திரம் 8,9) இயங்குகிறது

நான்காம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே சஹஸ்ராரத்தில் பூரணத்துவமாய் விளங்கி(அருட்குரு மந்திரம் 1) கீழே மூலாதாரத்தில் கடவுட்தன்மையாய்(அருட்குரு மந்திரம் 10) இயங்குகிறது

ஐந்தாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே துரியத்தில்(தலைக்கு மேல் நிராதாரக் குண்டலி வட்டத்தில்) பரவிந்தாய் விளங்கி(தயவாய்) கீழே முழங்கால்களில் அருளாட்சியாய்(அருட்குரு மந்திரம் 11) இயங்குகிறது

ஆறாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(அருட்குரு மந்திரம் 5) மேலே துரியாதீதத்தில்(தலைக்கு மேல் நிராதார ஓங்கார வட்டத்தில்) பரநாதமாய் விளங்கி(இரு) கீழே பாதங்களில் நானே நானெனும் பூரணமாய்(அருட்குரு மந்திரம் 12) இயங்குகிறது

ஏழாம் 8

நடுநாயக இருதயப் பேரன்பே(நானே வழி) மேலே பரலோக சத்தியமாய் விளங்கி கீழே அன்னை பூமியில் ஜீவனாய் இருந்து இயங்குகிறது(அருட்குரு மந்திரம் 13)

பின்னூட்டமொன்றை இடுக