பொன்னணிகள் அலங்கரித்துக் கல்லுருக்குப் பூசைஏழை
மெய்யுருவின் பசிக்கில்லை சோறு
மெய்யெலாம் ஈரம்மிக கல்லுருமுன் ஓலமிட்டும்
நின்னகச் சாரந்தொடல் அரிது
நெஞ்செலாம் ஈரம்மிக மெய்உயிர்க்கும் வாசிதொட
நின்னகச் சாரந்தொடல் எளிது
(வாசி = மூச்சு, விஞ்ஞானம் பிராண வாயுவை-ஆக்சிஜன்-யும், கரியமில வாயுவையும் அறியும், மெய்ஞ்ஞானம் “சிவா” அவரின், அல்லாவின், பரமபிதாவின் அருட்தாரையை அறியும்!
வாசியில் வாழும் பரலோக வாசியை
வாசிக்க மாயும் மரணம்
மூச்சென்னும் இறைவனின் கொடையை மனிதர் நமக்கு மதிக்க மனமில்லை!
மூச்சே தாண்டா பேச்சு பேசியேஅது
வீணா னாலுயிர் போச்சு
இருதய அன்பை ஞாபகங் கொளல், மூச்சைக் கவனமாய்ப் போற்றுதல், இந்த இரண்டு படிகளை விரும்பி மேற்கொண்டால், எல்லாப் படிகளையுந் தாண்டலாம், நமக்கோ விருப்பம் அறவே இல்லை, எனவே தான் நமது இந்த அவ நிலை!)